ஆப்நகரம்

புலம் பெயர் தொழிலாளி உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்: முதல்வர் பாராட்டு!

வடமாநில தொழிலாளியின் உயிரை காப்பாற்றிய கோவை மருத்துவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Aug 2020, 2:24 pm
விபத்தில் சிக்கிய வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ஆபத்தான சூழலில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் துரிதமாக அறுவைசிகிச்சை செய்து தொழிலாளியின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
Samayam Tamil coimbatore


திருப்பூர் மாவட்டம், கருப்பகவுண்டன் புதுாரில் வசிப்பவர் விக்ரம் குமார்(20). வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான இவர் சாலை விபத்தில் சிக்கி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு துரிதமாக அறுவை சிகிச்சை செய்தனர். முன்னதாக விக்ரம் குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இருப்பினும் மருத்துவர்கள் காலதாமதமின்றி பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து: முதல்வர் நடத்தும் ஆய்வு !

தொற்று உள்ளது என தெரிந்தும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மருத்துவர்கள் செயல்பட்டு வெற்றி அடைந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில், புலம் பெயர் தொழிலாளியை கோவை அரசு மருத்துவர்கள் நெருக்கடியான சூழலிலும் காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் மூலம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி