ஆப்நகரம்

கோவை: அரசு ஊழியர்களுக்கான குடிநீர் தொட்டியில் இறந்து கிடக்கும் தேள், பூரான், பாம்பு!

கோவையில் அரசு ஊழியர்களுக்காக விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டி பரமாரிக்கப்படாமல் தேள், பூரான் உள்ளிட்டவை இறந்து கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written byபிரபாகர் B | Samayam Tamil 9 May 2023, 4:20 pm
தமிழக கேரள எல்லையான பரம்பிக்குளம் அணையின் அருகே உள்ள பிஏபி காலனி அரசு ஊழியர் குடியிருப்பில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு வாசிகளுக்கு, பரம்பிக்குளம் அணியிலிருந்து நீரேற்றம் செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மூலம் குடிநீர் ஆனது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil covai water tank issue
covai water tank issue


மோசமான நிலையில் குடிநீர் தொட்டி

இந்த குடிநீர் தொட்டி மிகவும் மோசமான நிலையில் பாழடைந்த வீடு போல காட்சியளிக்கிறது. சரிவர பராமரிக்கப்படாமல் உள்ள அந்த தண்ணீர் தொட்டியில் தவளை, பூரான், தேள், பாம்பு உள்ளிட்டவை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியர் குடியிருப்புக்கு மட்டுமல்லாமல் அரசு விருந்தினர் மாளிகைக்கும் இங்கிருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். முறையாக தண்ணீர் தொட்டியை மூடாத காரணத்தால் வௌவால், தவளை மற்றும் ஊர்வனவற்றின் வசிப்பிடமாக மாறி இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவையில் மேலும் ஒரு ராணுவ தொழிற் பூங்கா... விமானங்களை பழுது பார்க்கும் வகையில் ஏற்பாடு!
அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு

இறந்த தேள், தவளை, பாம்பு மற்றும் வௌவால்களின் எச்சம் கலந்த குடிநீரை பயன்படுத்துவதன் மூலமாக, குடியிருப்பு வாசிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. தொட்டியை சுத்தம் செய்து பராமரிப்பதோடு குடிநீர் தொட்டியை முழுமையாக மூடித் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, குடிநீர் தொட்டிக்குள் வௌவால் பறப்பது போன்றும், தவளை இறந்து கிடப்பது போன்றும், பூரான் நெளிந்து செல்வது போன்றும் எடுக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடிநீர் தொட்டியை முறையாக சீரமைத்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பிஏபி காலனி அரசு ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி