ஆப்நகரம்

வனவிலங்குகளை கண்காணிக்க உதவும் ஆளில்லாத பறக்கும் விமானம் கோவை வந்தன

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருக்கும் விலங்குகளை கண்காணிக்க உதவும் ஆளில்லாத குட்டி பறக்கும் விமானம் கோவை வந்தது.

Samayam Tamil 2 Aug 2018, 12:55 am
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருக்கும் விலங்குகளை கண்காணிக்க உதவும் ஆளில்லாத குட்டி பறக்கும் விமானம் கோவை வந்தது.
Samayam Tamil drone-flight
ஆளில்லாத பறக்கும் விமானங்கள் கோவை வந்தன


கோவை, மேட்டுப்பாளையம் உட்பட போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமை உள்ளிட்ட 7 வனச்சகரங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகள் புலிகள், சிறுத்தை, காட்டெருமைகள், யானைகள் உட்பட பல விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகின்றன.

இங்குள்ள மக்கள் வாழும் பகுதிகளில், காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பெரிய அச்சுற்றுத்தலை அளித்து வருகின்றன. ஊருக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து சிரமம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்துவதற்கும், விலங்குகளை கண்காணிப்பதற்கும் ஆளில்லாத குட்டி விமானம் வேண்டும் என
வனத்துறை சார்பில் அதற்கான உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத்தப்பட்டது.

தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், பல்வேறு வசதிகளுடன் கூடிய பறக்கும் ட்ரோன் ரக குட்டி விமானங்கள் கோவை வந்துள்ளன. இதை பயன்படுத்தும் வழிமுறை தொடர்பாக விரைவில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வனவிலங்கு நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்வதுடன், அதில் புகைப்படமும் எடுக்க முடியும். தேனீக்கள் சத்தம் கேட்டால் யானை ஓடி விடும் என்பதால், தேனீக்கள் போன்று இந்த விமானங்கள் ஒலி எழுப்பும்.

வனப்பகுதிக்குள் மனித நடமாட்டம், வன எல்லையை கண்காணிக்கும் பணி, காயம்படும் விலங்குகள் ஆகியவற்றை இதன்மூலம் கண்காணிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.

அடுத்த செய்தி