ஆப்நகரம்

அப்படி என்ன சரக்கா இருக்கும்..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர் மீது ரயில் ஏறியும் உயிர் பிழைத்த அதிசயம்!

கோவையில் தண்டவாளத்தில் மது போதையில் தூங்கிய நபரின் மேலே ரயில் கடந்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Samayam Tamil 28 Sep 2021, 12:29 pm
கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும், சுமார் இரண்டாயிரம் பேர் நின்றுக்கொண்டு பயணிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோயம்புத்தூர்


இந்நிலையில், நேற்று மாலை ரயில் வழக்கம் போல் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது துடியலூர் - பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளார்.

அப்போதும், அவர் தூங்கிய நிலையிலேயே இருக்க, ஓட்டுநர் பிரேக் பிடித்தும் தூங்கிய நபருக்கு மேலே ரயில் சென்றது. பின்னர் சிறிது தூரம் சென்று ரயில் நிற்கவே நான்காவது பெட்டிக்கு அடியில் ஒய்யாரமாக தூங்கிக்கொண்டிருந்த நபரை ரயில் இருந்தவர்கள் தட்டி எழுப்பினர்.
விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை… சிறையில் அடைக்கப்பட்ட சக அதிகாரி!

அவர் எழுந்த போதுதான் மதுபோதையில் படுத்து தூங்கியது தெரியவந்தது. ஒருவழியாக அவரை எழுப்பி ஓரமாக உருட்டி விட்ட பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறிச்சென்றனர். இந்த சம்பவத்தில் சிறிய காயங்கள் கூட ஏற்படாமல் அவர் உயிர் பிழைத்தை அதிர்ஷ்டம்னு தான் சொல்லனும்.

அடுத்த செய்தி