ஆப்நகரம்

குடிபோதையில் திமிராக பேசிய இளைஞரை, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவலர்கள்!!

கோவை: வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம், குடித்துவிட்டு திமிராக பேசிய இளைஞரை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 28 Jul 2018, 4:25 pm
கோவை: வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம், குடித்துவிட்டு திமிராக பேசிய இளைஞரை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Samayam Tamil குடிபோதையில் திமிராக பேசிய இளைஞரை, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவலர்கள்!!
குடிபோதையில் திமிராக பேசிய இளைஞரை, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற காவலர்கள்!!


கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் பகுதியில், நேற்று மாலை போக்குவரத்து காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுதர்சன் என்பவர், குடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவரது வாகனத்தை நிறுத்தி, அவரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் ஒத்துழைப்பு தராமல், தனது உறவினர் நீதிபதியாக உள்ளார் என்று திமிராக பேசியுள்ளார்.

காவல்துறையினரிடம் அவர் மிரட்டும் தோணியில் பேசுவதை, காவலர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளனர்.

இதையடுத்து, காவலர்களை தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது, குடித்து விட்டு வாகனம் ஒட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் சுதர்சன், யாரும் குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். அப்படி ஓட்டினால், காவல்துறையினர் கைது செய்வார்கள். அது அவர்களது கடமை. அவர்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி