ஆப்நகரம்

குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்!

கோவை அருகே குடிப் பழக்கத்தைக் கைவிடக் கோரி ஏற்பட்ட தகராற்றில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 25 Nov 2020, 11:12 pm
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வலசு பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. வயது 56. விவசாயி. இவருக்குச் சொந்தமான தோட்டத்திற்குப் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருபவர் ராம்குமார். வயது 24. இருவரும் நண்பர்கள்.
Samayam Tamil குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்!
குடித்துக் கொண்டிருந்த விவசாயியை அடித்து கொன்ற நண்பரின் உறவினர்!


இந்த நிலையில் கருப்பசாமியும் ராம்குமாரும் சரியாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு தங்கள் வீடுகளுக்குச் சென்று தகராறு செய்து வந்துள்ளனர். இருவரின் நடவடிக்கை குடும்பத்தார் மத்தியில் கவலையை ஏற்படுத்தவே, ராம்குமாரின் அண்ணன் சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார்.

எனினும், அதைக் கண்டு கொள்ளாத 2 பேர், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராற்றில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த சூழலில் செவ்வாய்க் கிழமை இரவு வழக்கம்போல் 2 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த சக்திவேல் அங்குச் சென்று ராம்குமாரைக் கண்டித்துள்ளார். இதைப் பார்த்த கருப்பசாமி எனது நண்பரை எதற்காகக் கண்டிக்கிறாய் எனக் கேட்டுள்ளார். இதன் காரணமாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்த கட்டையை எடுத்து கருப்பசாமியைத் தாக்கினர்.

ஆயில் மசாஜ் செய்து மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி அபேஸ்!

இந்த தாக்குதல் காரணமாகப் பலத்த காயமடைந்த கருப்பசாமி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கருப்பசாமி பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் சக்தி வேலை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி