ஆப்நகரம்

கோ கொரோனா கோ... வடமாநிலப் பெண்களை சீனர்கள் என நினைத்து சீண்டியவர்கள் கைது

வடமாநிலப் பெண்களை சீனர்கள் என்று நினைத்து குடிபோதையில் அவமரியாதை செய்த இளைஞர்கள்

Samayam Tamil 19 May 2020, 7:54 am
மதுபோதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil corona virus - கோப்புப்படம்


கோவையில் மேகாலாயா, மணிப்பூர் ,அஸ்ஸாம் உட்பட பல்வேறு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக சாய்பாபா காலனி பகுதியில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் மணிப்பூர், மேகாலாயா மாநிலங்களை சேர்ந்த பெண்களிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

வடமாநில பெண்களின் தோற்றத்தை வைத்து அவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள் என நினைத்து கொண்டு அவர்களை தகாத வார்த்தையில் திட்டியதுடன், அவர்களைத் தள்ளியும் விட்டுள்ளனர்.

10th public exam: 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய சில காரணங்கள்

இதனைத் தொடர்ந்து அந்த வடமாநில பெண்கள் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் இந்த புகாரில் கொரோனா பரவுகின்றது என கூறி, "கொரோனா கோ" என பேசுவதாகவும் , தகாத வார்த்தையில் திட்டுவதுடன் தள்ளிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் தகராறு செய்த வாலிபரின் வீடியோவையும் வடமாநில பெண்கள் சாய்பாபா காலனி காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி