ஆப்நகரம்

இனி கொரோனா கவலையே இல்லை, வந்தாச்சு புதிய தியேட்டர்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மல்டிப்ளக்ஸ் திரையரங்கத்தில் கொரோனா காலத்திலும் கவலையில்லாமல் படம் பார்க்க, ப்ரைவசி (privacy) திரையரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 5:01 pm
திருப்பூர் மாவட்டத்தில் ஸ்ரீ சக்தி சினிமாஸ் மல்டிப்ளக்ஸ் என்ற தனியார் திரையரங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த திரையரங்கில் கொரோனா அச்சமின்றி படம் பார்த்து ரசிக்க ப்ரைவசி (privacy) திரையரங்கு உருவாகியுள்ளது.
Samayam Tamil இனி கொரோனா கவலையே இல்லை, வந்தாச்சு புதிய தியேட்டர்!
இனி கொரோனா கவலையே இல்லை, வந்தாச்சு புதிய தியேட்டர்!


இப்போதைய நேரத்தில் இது சோதனை முயற்சியாகவே கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அதேவேளை இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரியளவில் ஆதரவு கிடைத்திருப்பதாகத் திரையரங்கு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. பொது முடக்கம் காரணமாக பல்வேறு துறைகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக இறுதியில் கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் போன்றவற்றிற்கு அரசு அனுமதி அளித்தது.

கழிப்பறையில் நாற்றமா கோவை கமிஷ்னருக்கு கடிதம் அனுப்பலாம்!

அனுமதி கிடைத்தபோதும் திரையரங்கு செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது திரையரங்குகள் செயல்பட்டு வந்தாலும், மக்களிடையே நிலவும் அச்சம், உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லை போன்ற காரணங்களால் தற்போது வரை திரையரங்குகளில் கூட்டமே இல்லாத நிலை உள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கத்தில் ப்ரைவசி திரையரங்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி