ஆப்நகரம்

ஆடுகளம்: சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கோவையில் கைது

மதுரையில் நடக்கும் சேவல் சண்டையை கதைக்களமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் சேவை சண்டை குறித்து விரிவாக காட்டப்பட்டிருந்தது

Samayam Tamil 14 Oct 2019, 1:50 pm
கோவை: பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேரை கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil cock fight


ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டி பந்தயங்கள் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ, அதேபோல் சேவல் சண்டையும் தமிழகத்தில் சங்ககாலம் முதெலே பிரசித்தி பெற்றது. தங்களின் கவுரவமாகவும், உணர்வோடும், உயிரோடும் கலந்த பந்தமாகவும் சேவல்கள் பார்க்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் சேவல் சண்டையை கதைக்களமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் சேவை சண்டை குறித்து விரிவாக காட்டப்பட்டிருந்தது.


பரிசுப் பொருட்கள், பண முடிப்பு, கவுரவம் என்று நீண்ட காலமாக இருந்த சேவல் சண்டையில் சூதாட்டம் கலந்ததால், கைகலப்பு தொடங்கி கொலை சம்பவங்கள் வரை அரங்கேறின. இதன் விளைவாக சேவல் சண்டைக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை கள்ள நோட்டு வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்: மேலும் இருவர் கைது..ரூ.14.09 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்

இந்நிலையில் தடையை மீறி பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா நெகமம் பகுதியில் 4 பேர் கூட்டாக சேர்ந்து சேவல் சண்டை விட்டு பந்தயம் விட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நெகமம் காவல் நிலைய துணை ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தார். அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள், ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தாமரை குலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32), கோவில் பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (32), அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார் (24), குள்ளக்கா பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (22) என்பது தெரியவந்துள்ளது.

சிக்கிய முக்கிய ஆவணங்கள்- கோவையை உலுக்கும் என்.ஐ.ஏ சோதனை!

இதேபோல் சூலூர் துணை ஆய்வாளர் ஜெகநாதன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, ராமேஸ்வர டெக்ஸ்டைல் பின்பக்கம் உள்ள காலி இடத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த சூலூரை சேர்ந்த மனோஜ் குமார் (18), நித்தியானந்தம் (வயது 37), வெங்கடேசன் (வயது 30), ஒண்டிப்புதூரை சேர்ந்த மனோஜ் (23) ஆகிய நான்கு பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள் ரூ.300 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி