ஆப்நகரம்

கோவை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 2பேர் மின்சாரம் தாக்கி பலி!

குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரண்டு பேர் பரிதாபமாக மின்சார தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Apr 2021, 11:04 pm
வழுக்குப்பாறை கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜ் என்பவரின் தோட்டத்தில் வேலைபார்க்கும் கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ராசு.
Samayam Tamil கோவை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 2பேர் மின்சாரம் தாக்கி பலி!


மற்றொருவர் மீனாட்சிபுரம் பகுதியை மல்லிகா. இருவரும் தோட்ட வேலையை முடித்துக்கொண்டு, தோட்டத்தின் அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

முதலில் குளத்தில் இறங்கிய ராசு குளத்தில் அறுந்து கிடந்த மின் ஒயரை கவனிக்காததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என தெரியாமல் ராசுவை காப்பாற்ற சென்ற மல்லிகாவும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவனை இனி தடுப்பூசி எப்போதுமே கிடையாது: கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார், ஆய்வு செய்ததில் இடம் வழுக்குப்பாறை தாண்டி மீனாட்சிபுரம் அருகில் வருவதால் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

தற்பொழுது கிணத்துக்கடவு போலீசார் உடல்களைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்த செய்தி