ஆப்நகரம்

வாகனங்களை வழிமறித்த காட்டுயானை... போக்குவரத்து பாதிப்பு

சாலையில் உள்ள மரக் கிளைகளை உடைத்தபடி நின்றன. சாலையில் நின்றிருந்த வாகனங்களையும் கவனிக்காமல் அவை நெடுநேரம் உணவு உண்டன.

Samayam Tamil 16 Sep 2020, 12:18 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன.
Samayam Tamil வழிமறித்த யானை


இந்நிலையில், யானைகள், காட்டெருமைகள், புலி, கரடி, சிறுத்தை, மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. இந்தப் பகுதிகளில் இப்படி வன விலங்குகள் கடப்பது தவிர்க்கப் முடியாத ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் மூன்று காட்டு யானைகள், கோத்தகிரியில் உள்ள முதலாவது கொண்டை ஊசி வளைவில், சாலையில் உள்ள மரக் கிளைகளை உடைத்து பசியாற்றி கொண்டன. சாலையில் நின்றிருந்த வாகனங்களையும் கவனிக்காமல் அவை நெடுநேரம் உணவு உண்டன. இதனால் அந்த வழியில் சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கிடைச்சுட்டாங்க கடலில் மாயமான காசிமேடு மீனவர்கள்; அதுவும் இந்த நாட்டில்!

வனவிலங்குகள் - மனிதர்கள் இடையிலான மோதல் வெகுநட்களாக நீடித்து வரும் நிலையில், கோவை பகுதியில் இந்த சம்பவ்ங்கள் அதிகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி