ஆப்நகரம்

மனைவி மீது உள்ள கோபத்தில் இரண்டு மகள்களையும் வெட்டி கொன்ற தந்தை..! கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே மனைவி மீது உள்ள கோபத்தில் தான் பெற்ற இரண்டு மகள்களையும் தந்தையே கொலை செய்து தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Dec 2018, 4:28 pm
கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பத்மநாபன் - செல்வராணி தம்பதியினர். இவர்களுக்கு ஹேமவர்ஷினி (15) ஸ்ரீஜா (10) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil vlcsnap-2018-12-07-16h24m16s628


இந்நிலையில் கணவன் மனைவி இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவரும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு வந்து கணவர் மனைவியிடையே பேசி சமரசம் செய்துள்ளனர்.

இதன்பின் செல்வராணி வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது கணவர் இரு குழந்தைகளுடன் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். செல்வராணியுடன் குழந்தைகள் செல்ல விரும்பியதாகவும், ஆனால் அவரது கணவர் பத்மநாபன் குழந்தைகள் தன்னுடனே இருக்கட்டும் என்று கூறி செல்வராணியை மட்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காலை செல்வராணி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராணி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பத்மநாபன் தலைமறைவாக உள்ளார் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி