ஆப்நகரம்

மகனைக் கொன்று வாகன விபத்து எனக் கோவை போலீசை வைத்த மருத்துவமனையில் சேர்த்த தந்தை!

பொள்ளாச்சி அருகே மகனை அடித்துக் கொன்று தூக்கி எரிந்துவிட்டு விபத்தில் சிக்கியதாக நாடகமாடிய தந்தையின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 14 Sep 2021, 1:16 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மகனைக் கொலை செய்துவிட்டு விபத்தில் சிக்கியது போல நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil மகனைக் கொன்று வாகன விபத்து எனக் கோவை போலீசை வைத்த மருத்துவமனையில் சேர்த்த தந்தை!


கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். வயது 50. கட்டிடத் தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் செந்தில்குமார். வயது 24. 16 வயதில் இளைய மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தந்தை கதிர்வேல் மற்றும் இரண்டு மகன்களும் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தந்தை கதிர்வேல் தனது இளைய மகனுடன் கூட்டச் சேர்ந்து செந்தில்குமாரைக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து தந்தை மற்றும் இளைய மகன் இருவரும் சேர்ந்து மயங்கிய செந்தில்குமாரைத் தூக்கி அருகில் உள்ள பாலத்தின் அருகே கொண்டு சென்று வீசியுள்ளனர். தொடர்ந்து தந்தையும் இளைய மகனும் விபத்தில் சிக்கி செந்தில்குமார் காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌.
மனைவி சுட்ட தோசை கருகியதால் கணவன் எடுத்த கொடுமையான முடிவை பாருங்க!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில்குமாரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த செந்தில்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மகனைத் தாக்கி கொலை செய்து நாடகமாடிய தந்தை மற்றும் இளைய மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி