கோயம்புத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலை உள்ளது. இந்த மலை பகுதியில் மிளா, கரடி, முயல், காட்டு பன்றி, யானைகள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அரிய வகை மூலிகைகளும் நிறைந்துள்ளன. இந்நிலையில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
வனத்துறையினருக்கு தகவல்
காற்றின் வேகம் மேற்கிலிருந்து கிழக்கு இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்து திடுக்கிட்ட பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பாறைகள் நிறைந்த பகுதிகள்
போலாம்பட்டி அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு பாறையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 40 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் கடந்த இரண்டு நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செங்குத்தான பகுதி என்பதால் பாறைகள் அதிகம் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிகிறது. 50 ஹெக்டர் ஏற்கனவே எரிந்துள்ளது
தற்போது தீயணைக்கும் குழுவினர் கீழ்மலை மற்றும் மேல்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைப் பகுதியானது சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பாகும், இதில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ளது.
ஆட்சியர் நடவடிக்கை
பாறைகள் நிறைந்த பகுதிக்கு செல்ல முடியாததால், பாறைகள் நிறைந்த பகுதியில் தீ பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆட்சியர் நேரில் ஆய்வு
இந்நிலையில் காட்டுத் தீ பரவி வரும் அப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தீயை அணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டறிந்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
கோரிக்கை
இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீ பிடிப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினருக்கு தகவல்
காற்றின் வேகம் மேற்கிலிருந்து கிழக்கு இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்து திடுக்கிட்ட பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பாறைகள் நிறைந்த பகுதிகள்
போலாம்பட்டி அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு பாறையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 40 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் கடந்த இரண்டு நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செங்குத்தான பகுதி என்பதால் பாறைகள் அதிகம் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றி எரிகிறது.
தற்போது தீயணைக்கும் குழுவினர் கீழ்மலை மற்றும் மேல்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைப் பகுதியானது சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பாகும், இதில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ளது.
ஆட்சியர் நடவடிக்கை
பாறைகள் நிறைந்த பகுதிக்கு செல்ல முடியாததால், பாறைகள் நிறைந்த பகுதியில் தீ பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆட்சியர் நேரில் ஆய்வு
இந்நிலையில் காட்டுத் தீ பரவி வரும் அப்பகுதியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தீயை அணைக்கும் பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டறிந்து சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
கோரிக்கை
இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீ பிடிப்பதற்கான காரணத்தை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.