ஆப்நகரம்

கார் மீது டிரக் மோதி பயங்கரம்; திருப்பூர் அருகே 4 பேர் பலி!

திருப்பூர்: வாகனம் ஒன்றை முந்திச் செல்கையில் கார் விபத்துக்கு ஆளானதில் 4 பேர் பலியாகினர்.

TIMESOFINDIA.COM 1 Oct 2018, 9:48 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மளிகை கடை நடத்தி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(33). இவர் தனது மனைவி கலைவாணி(30), மகள் ஹர்ஷினி(7) உடன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள கோவிலுக்குச் சென்றுள்ளார்.
Samayam Tamil Accident


அவருடன் மேலும் சில உறவினர்கள் வேறு இரு கார்களில் உடன் சென்றனர். கிருஷ்ணமூர்த்தியின் காரை ஓட்டுநர் மனோஜ் குமார்(30) ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை மனோஜ் குமார் முந்திச் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த டிரக், கார் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் கிருஷ்ணமூர்த்தி, கலைவாணி, மனோஜ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹர்ஷினி உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Four die as car rams truck in TN.

அடுத்த செய்தி