ஆப்நகரம்

ஆழியாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் உட்பட, 4 பேர் பலி!

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 15 Apr 2018, 12:14 am
கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில், கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil ஆழியாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் உட்பட, 4 பேர் பலி!
ஆழியாறு அணையில் குளித்த கல்லூரி மாணவர்கள் உட்பட, 4 பேர் பலி!


கோவை ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவன ஊழியர், தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆழியாறு அணைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, துரதிர்ஷ்டவசமாக அவர்கள் நான்கு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கே வந்த தீயணைப்புத் துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி