ஆப்நகரம்

அரசுப் பேருந்தில் திடீரென உடைந்து விழுந்த கண்ணாடி

மேட்டுப்பாளையம் சாலையில் ஓடும் அரசு பேருந்தில் முன்பக்க கண்ணாடி எதிர்பாராத நேரத்தில் உடைந்து விழுந்தது.

Samayam Tamil 15 Dec 2018, 6:23 pm
உதகையில் இருந்து பாலக்காடு நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே கே.எஸ்.பி நிறுத்தம் வரும் போது, பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது.
Samayam Tamil 1


பேருந்தின் கண்ணாடி திடீரென உடைந்து விழுந்ததால் பயணிகளும் ஒட்டுநரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

அதிர்ஷ்டவசமாக ஓட்டுநருக்கோ பயணிகளுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

அடுத்த செய்தி