ஆப்நகரம்

கோவையில் ரூம் போட்டு கஞ்சா விற்று வந்த கேரள வாலிபர் கைது!

கேரளாவிலிருந்து கோவை வந்து தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 20 Jan 2021, 12:04 am
கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் கேரளாவில் இருந்து கோவை வந்து ரூம் எடுத்து தங்கி இங்கு கிடைக்கக்கூடிய வேலையை செய்து கொண்டிருந்துள்ளார்.
Samayam Tamil கஞ்சா விற்பனை வாலிபர் கைது
கஞ்சா விற்ற கேரள வாலிபரை கோவை போலீசார் கைது செய்தனர்


அத்துடன் வாரம் ஒருமுறை கேரளாவிலிருந்து கஞ்சா கொண்டு வந்து அதை பொட்டலங்களாக போட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

நேற்று மாலை தடாகம் போலீசாருக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் மாங்கரை பாலம் அருகே சென்று ஆய்வு செய்தனர்.

பன்றி வேட்டைக்குச் சென்ற இடத்தில் இளைஞர் சாவு: அப்படி என்னதான் நடந்து?

அங்கு சதீஷ்குமார் கஞ்சா விற்பனை செய்தபோது கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அடுத்த செய்தி