ஆப்நகரம்

கை காயத்துக்கு சிகிச்சை...பறிபோன சிறுமியின் உயிர்

கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைக்கு சென்ற சிறுமி சிகிச்சையின்போது இறந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 1:50 pm
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும் ஹரிணி(6), பிரியதர்ஷினி( 3.5 ) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
Samayam Tamil கோவை சிறுமி
கோவை தனியார் மருத்துவமனையில் சிறுமி மரணம்


கடந்த திங்கட்கிழமை காலை வீட்டில் கழிவறைக்குச் செல்லும் படியில் ஏறிய பொழுது சிறுமி பிரியதர்ஷினி தடுமாறிக் கீழே விழுந்ததில் இடது கை முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் கையும் வீங்கி காணப்பட்டது. இதையடுத்து பிரியதர்ஷினியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆபரேஷன் செய்வதற்கு வசதிகள் இல்லை என்றும் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு செல்லுங்கள் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

பிரபல கோவை கொலை வழக்கு அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா!

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பிரியதர்ஷினியை அவரது பெற்றோர்கள் அழைத்து வந்து சேர்த்துள்ளார்கள்.

பிரியதர்ஷினியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்துள்ளார்கள். ஆப்ரேஷன் செய்த பிறகு இரவு 10:50 மணிக்கு பிரியதர்ஷினி இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் கையில் ஏற்பட்ட காயத்திற்கு எப்படி உயிர் போகும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதம் செய்தார்கள்.

கொரோனா 2ஆம் அலையா..? காவல் நிலையம் மூடல்!

தவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சரவணம்பட்டி போலீசாரிடம் தங்களின் குழந்தை இறந்தது குறித்து விசாரணை நடத்தி, மருத்துவமனை நிர்வாகத்தி்ன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியதர்ஷினியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைக்கு பின் பிரியர்தஷினியின் உடல் அவரது பெற்ரோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

"குழந்தைக்கு நுரையீரல் சுருங்கி உள்ளதால், இருதயம் வேலை செய்யாமல் இருப்பதாகவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்றும் முதலில் கூறிய மருத்துவர்கள் பின்னர் காப்பாற்ற முடியவில்லை என்று கைவிரித்துவிட்டனர். தவறான சிகிச்சையால் தான் தங்கள் குழந்தையை பறிகொடுத்து நிற்கிறோம்" என்று இறந்த சிறுமி பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

அடுத்த செய்தி