ஆப்நகரம்

கோயம்புத்தூரில் பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி!!

Tamil Nadu Coronavirus: கோயம்புத்தூரில் இளம் பெண் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

Samayam Tamil 19 Mar 2020, 10:15 am
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Samayam Tamil கோவையில் கொரோனா


கோயம்புத்தூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனி வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தப் பெண் பெங்களூருவில் உயர் கல்வி படித்து வந்தார். சமீபத்தில் பெங்களூருவில் இருந்து திரும்பிய இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை உணர்ந்த அந்தப் பெண் சூலூரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதிக்கப்பட்ட பின்னர் கோவை மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். கொரோனாவுக்கான வேறு அறிகுறிகள் வெளிப்படுகிறதா என்பதை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Corona News Updates: தமிழ்நாட்டில் தாக்கம் எப்படி உள்ளது?

தமிழகத்தில் நேற்று இரண்டாவது ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் ரயிலில் சென்னை வந்துள்ளார். வெளிநாட்டுக்கு சென்றவர் இல்லை. இதிலிருந்து உள்நாட்டில் கொரோனா தொற்று இருப்பவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவது உறுதியாகி உள்ளது.

Coronavirus Latest News: சென்னை வந்த 44 பேருக்கு கொரோனா அறிகுறி!

தமிழத்தில் இதுவரை 1.89 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களில் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 54 பேரின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 3000 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா ஆத்திரத்தில் சீனராக கருதி இந்தியர் மீது தாக்குதல்!!

அடுத்த செய்தி