ஆப்நகரம்

தங்க கடத்தல்...ஏர்போர்ட்டில் சிக்கிய ஆறு பேர்!

சார்ஜாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 3.6 கோடி ரூபாய் தங்கம் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆறு பேர மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 3:06 pm
வெளிநாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தப்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. இன்னொரு நிகழ்வாக பாஷா, நாசர், சாஜித், சாகுல் ஹமீத், யுவராஜ், தர்மராஜ் ஆகிய 6 பேர் சார்ஜாவில் இருந்து கோவை வந்துள்ளனர்.
Samayam Tamil தங்க கடத்தல்
கோவை விமான நிலையம் -தங்க கடத்தல்


அப்பொழுது அவர்களிடம் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்களிடம் பேஸ்ட் வடிவில் தங்கம் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கமிஷனுக்காக தங்கத்தை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி