ஆப்நகரம்

படக்காட்சிகளைப் போல், ரூ. 2 லட்சம் லஞ்சப் பணத்தோடு கைதான அதிகாரி!

லஞ்சம் வாங்க முயன்ற எக்சிகியூட்டிவ் ஆபிசரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Dec 2020, 7:35 pm
சோமனூர் அருகே சோமு பிராபர்ட்டி என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் உள்ள சாலை விரிவாக்கப் பணி நடத்த அனுமதி தேவைப்பட்டுள்ளது. இதற்காக அரசு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அனுமதி வழங்க வேண்டுமென்றால் கையூட்டாகப் பணம் வேண்டும் என அதிகாரி ஒருவர் கோரியுள்ளார்.
Samayam Tamil படக்காட்சிகளைப் போல், ரூ. 2 லட்சம் லஞ்சப் பணத்தோடு கைதான அதிகாரி!
படக்காட்சிகளைப் போல், ரூ. 2 லட்சம் லஞ்சப் பணத்தோடு கைதான அதிகாரி!


அதன்படி அரசு அதிகாரி செல்வராஜ் என்பவரைக் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் அணுகியுள்ளது. அந்த அலுவலருடன் நடந்த பேரத்தில் ரூ. 5 லட்சம் பணத்தை செல்வராஜ் கையூட்டாகக் கேட்டுள்ளார். தனியார் நிறுவனமும் அனுமதிக்காக செல்வராஜ் கேட்ட பணத்தைத் தர ஒப்புக் கொண்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவனம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து, ரூ. 2 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை அறிவுறுத்தலின் பெயரில், சோமு பிராபர்டிஸ் உரிமையாளர்கள் கையூட்டு கேட்ட செல்வராஜிடம் கொடுத்துள்ளனர்

“கடையை மூடு” திமுக அட்டகாசம்: மிரட்டல் விட்ட 40 பேர் கைது!

அப்போது குறிப்பிட்ட அரசு அலுவலகத்தின் வாசலில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வராஜ் பணத்தைப் பெற்றவுடன் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர். செல்வராஜைக் கைது செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி