ஆப்நகரம்

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு? - ஜெயிலுக்கு போன தொழிலதிபர்!

.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு 9.7 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோவையை சேர்ந்த தொழிலதிபரை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித் துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 30 Oct 2020, 2:49 pm
கோவையில் இயங்கும் எம்.எஸ்.கே. ASSOCIATED TRADERS என்ற நிறுவனம் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்கள் தயாரித்து செய்துள்ளதாக தெரிகிறது. இவற்றை கொண்டு விற்பனை தொடர்பாக போலி கணக்கு காட்டி, அதற்கு அரசு அளிக்கும் வரி சலுகை (input credit) பெற்றதாகவும் கூறப்படுகிறது.
Samayam Tamil ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு


இதனையடுத்து, கோவை ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொழிலதிபர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ள நிலையில், ரூ.5 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு என்பது பிணையில் வர முடியாத குற்றமாகும்.

மாணவிக்கு ஆபாசச் செய்தி அனுப்பிய ஆசிரியர்: 9 வருடம் கழித்து போக்ஸோ!

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற டீலர்கள் (முகவர்கள்), பயன்பாட்டாளர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி