ஆப்நகரம்

Coimbatore: ஆள்மாறாட்டம் செய்து காரில் கஞ்சா கடத்திய அமமுக பெண் பிரமுகர்...

சி.ஐ.டி. அதிகாரி , வருமான வரி அதிகாரி என்ற போலியான அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 18 Jun 2020, 10:10 pm
கோவையில் காரில் கஞ்சா கடத்திய முன்னாள் அதிமுக பெண் நிர்வாகியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா


கோவை வடவள்ளி அருகே காரில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் வடவள்ளி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனையிட்டனர். அதில் நான்கு கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும் அந்த காரில் சில போலி அடையாள அட்டைகளையும் கண்டுபிடித்துள்ளனர். தென்மண்டல சி.ஐ.டி. அதிகாரி அடையாள அட்டை, வருமான வரி அதிகாரி என்ற போலியான அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கால் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகளில் ஒன்றில் அனுபாமா திரிபாதி என்றும் இன்னொன்றில் ஜெயமணி என்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த திருப்பூர் அவிநாசி யைச் சேர்ந்த ஜெயமணி என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கைது செய்யப்பட்ட ஜெயமணி கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன் அதிமுகவில் மாவட்ட மகளிர் அணியில் நிர்வாகியாக பணியாற்றியவர் என்பதும், பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து அமுமுக வில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி