ஆப்நகரம்

போகி... பெரியார் புத்தகங்களைக் கொளுத்த இந்து மக்கள் கட்சி முயற்சி

பெரியாரின் கடவுள் மறுப்பு, பெண் ஏன் அடிமையானாள் உள்ளிட்ட அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்திவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர்.

Samayam Tamil 13 Jan 2021, 11:20 am
வேளாண் சட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள், சட்ட நகலை எரித்து போகியைக் கொண்டாடிய நிலையில், இதற்கு எதிர்வினையாக கோவை இந்து மக்கள் கட்சியினர் பெரியாரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil இந்து மக்கள் கட்சி


போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது புறம் இருந்தாலும் இப்பண்டிகை ஒட்டி இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சித்தனர்.

அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சிவத்திரு பிரசன்ன ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியாரின் கடவுள் மறுப்பு, பெண் ஏன் அடிமையானாள் உள்ளிட்ட அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்திவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர்.

இன்னொரு சட்ட எரிப்புப் போராட்டம்... வேளாண் சட்டத்தை எரித்து போகி கொண்டாடிய விவசாயிகள்

அப்போது போலீசார் இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் பிரசன்ன ஸ்வாமியை கைது செய்து அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் அசோக் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி