ஆப்நகரம்

கோவை அதிர்ச்சி- போலீசையே கத்தியை காட்டி மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகி- என்ன ஆனார் தெரியுமா!

விபரீதமாக நடந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகியை, போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 10:53 am
கோவை மாவட்டம் கோண வாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சுரேஷ்(39). இவர் இந்து முன்னணி அமைப்பின் தென் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.
Samayam Tamil Kovai Arrest


இதன் காரணமாக இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனிப்பட்ட காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் சுரேஷிடம் இருந்து, இந்து முன்னணி தென் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாவலர்களை கோவை மாநகர போலீஸ் திரும்பப் பெற்றுக் கொண்டது.

தனக்கு பதவி பறிபோனதை ஏற்றுக் கொள்ள இயலாத சுரேஷ், செய்வதறியாது விழித்துள்ளார். பின்னர் மது அருந்தி விட்டு, கோண வாய்க்கால் பாளையம் பகுதியில் நேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போடனூர் எஸ்.ஐ உதயகுமார், அவரை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத சுரேஷ், போலீசாரிடமே கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இன்று காலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி