ஆப்நகரம்

இந்து முன்னணி தலைவர் படுகொலை; என்.ஐ.ஏ தேடுதலால் சிறுபான்மையின மக்கள் வேதனை!

என்.ஐ.ஏ நடத்திய தேடுதல் வேட்டையில் தாங்கள் அந்நியப்படும் சூழலை உணர்வதாக சிறூபான்மையின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

TIMESOFINDIA.COM 5 Sep 2018, 8:20 pm
கோவை: என்.ஐ.ஏ நடத்திய தேடுதல் வேட்டையில் தாங்கள் அந்நியப்படும் சூழலை உணர்வதாக சிறூபான்மையின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil NIA


கடந்த வாரம் வியாழக்கிழமை, கோவையில் முகமது ரஃபிகுல் ஹசனின் வீடு மற்றும் மில் ஆகியவற்றில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர் இந்து முன்னணி பிரமுகர் சி.சசிகுமாரின் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ஆர்.ராஜா, ஹசனின் உறவினர்கள் மற்றும் ஊழியர்கள் இருக்கும் போதே என்.ஐ.ஏ தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மில்லில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது.

இந்த தகவலில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் மீது துப்பாக்கியை காட்டி அதிகாரிகள் விசாரித்துள்ளனர். குற்றம்சாட்டப்படாத அல்லது வழக்கில் சம்மந்தம் இல்லாதவர்கள் மீது ஏன் இப்படி துப்பாக்கியை உபயோகிக்க வேண்டும்.

மேலும் ஹசனின் உறவினர்களை, வீடுகளை காலி செய்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் தீவிர போராளிகளாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஹசனுடன் எந்தவொரு உறவினரும் தொடர்பில் இல்லை என்பது முக்கியமான விஷயம்.

தங்கள் விசாரணையின் போது, நல்லம்பாளையம் சாலையில் உள்ள கே.கே.புதூர் வீடு மற்றும் மில்லில் சிசிடிவி கேமராக்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் துண்டித்துள்ளனர். கேமராக்களை ஏன் அதிகாரிகள் துண்டிக்க வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளால் தாங்கள் அந்நியப்படுத்தப் படுவதாக சிறுபான்மையின மக்கள் உணர்வதாக கூறினர்.

Hindu Munnani leader murder Minority community people feel alienated after NIA conducted searches in Coimbatore, NCHROS says.

அடுத்த செய்தி