ஆப்நகரம்

லாவண்யா உயிரிழப்பு; சி.பி.ஐ. விசாரணை தேவை; கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் லாவண்யா உயிரிழப்பு குறித்து சி பி ஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Samayam Tamil 25 Jan 2022, 2:16 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தை உலுக்கிப் போட்ட லாவண்யா மரணம்.
  • கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
  • சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோப்பு படம்
தஞ்சாவூா் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தவர் லாவண்யா. கடந்த சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் பள்ளி தான் என மாணவியின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மரணத்திற்கு முன் மாணவி அளித்த மரண வாக்குமூலம் வெளியே வரவே தமிழகம் மீண்டும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு மத மாற்ற முயற்சியே காரணம் என தெரியவே இச்சம்பவம் தமிழகத்தை ஒரேடியாக உலுக்கிப்போட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டாய மதமாற்ற முயற்சிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு உயிரிழந்த பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை திருவள்ளுவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இது போன்று கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகள் இருவரையும், பள்ளியின் பாதிரியாரையும் காவல் துறையினா் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், சுதாகர், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் ,ஜெயபால் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் கோவை மாநகர பகுதியான சுந்தராபுரம்,செல்வபுரம் ராமநாதபுரம், ஒலம்பஸ், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி