ஆப்நகரம்

இப்படியும் நடக்குமா? குடிபோதையால் கோவையில் நடந்த சோகம்

மனைவியைக் காப்பாற்ற அவரது கணவரும் கிணற்றில் விழுந்தார். ஆனால், நல்லபோதையில் இருந்த பிரபுவால் நந்தினியைக் காப்பாற்ற முடியவில்லை.இதில் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

Samayam Tamil 19 Oct 2020, 2:31 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையத்தில் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தற்கொலை செய்து கொண்ட கிணறு


கோவை வடக்கிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தேவம்பாடி வலசு பகுதியில் வசித்துவரும் தம்பதியினர் பிரபு நந்தினி. இவர்களுக்கு 3 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.

இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயக் கூலிகளாக பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் குடிபோதையில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நந்தினி தோட்டத்திற்கு அருகே உள்ள கிணற்றில் விழுந்தார். இதைத்தொடர்ந்து மனைவியைக் காப்பாற்ற அவரது கணவரும் கிணற்றில் விழுந்தார். ஆனால், நல்லபோதையில் இருந்த பிரபுவால் நந்தினியைக் காப்பாற்ற முடியவில்லை.இதில் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

மாஸ்க்குகளால் உருவான ஆடை... சென்னை திருநங்கை டிசைனர் அசத்தல்

தகவலறிந்து வந்த வடக்கிபாளையம் போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பிரபுவுக்கு 25 வயது என்பது, நந்தினிக்கு 22 வயது என்பதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி