ஆப்நகரம்

மனைவி சுட்ட தோசை கருகியதால் கணவன் எடுத்த கொடுமையான முடிவை பாருங்க!

மனைவி சுட்ட தோசை கருகியதால் மனமுடைந்த கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2021, 2:24 pm

ஹைலைட்ஸ்:

  • மனைவி சுட்ட தோசை கருகியது.
  • மனமுடைந்த கணவர் தற்கொலை.
  • ஏற்கெனவே நான்கு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வாலிபர் தற்கொலை
கோவையில் வாலிபர் தற்கொலை
கோவை சிங்காநல்லூர் எஸ் .ஐ .எஸ். எஸ் காலனி நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி(வயது 52) கட்டிட தொழிலாளி. இவருக்கு மாதவி என்ற மனைவியும் ,2 மகன்களும் உள்ளனர்.
இவர் நேற்று வீட்டில் சாப்பிடும்போது மனைவி தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அதில் ஒரு தோசை கருகி போய் உள்ளது. இதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆத்திரத்தில் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பணம் எண்ணும் மெஷின்... வானதி சீனிவாசன் விளக்கம்!

ஏற்கெனவே 4 முறை பழனி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போதெல்லாம் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி