ஆப்நகரம்

குடிப்பழக்கத்த நிறுத்தமாட்டீயான்னு கேட்ட மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமைய பாருங்க!

மது குடிப்பதை நிறுத்த சொன்னதால் ஆத்திரமடைந்து மனைவியை பூரி கட்டையால் தாக்கிய கணவரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 17 Oct 2020, 4:16 pm
கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன். பூ வியாபாரம் செய்து வரும் இவர் குடிப்பழக்கம் கொண்டவர் எனத் தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
Samayam Tamil கோவை பூ வியாபாரி
மனைவியை தாக்கிய கணவர்


இதனை அவரது மனைவி தட்டிக் கேட்பதால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த காஜா உசேனை அவரது மனைவி கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் சமையலறையில் இருந்த பூரி கட்டையை எடுத்து மனைவியின் நெற்றியில் ஓங்கி அடித்துள்ளார்.

திருமணமான பெண்ணிற்குக் காதல் தொல்லை, கத்தி எடுத்த தந்தையே குத்தினார்!

இதில் அவரது நெற்றி பிளந்து ரத்தம் கொட்டியது. காஜா உசேனின் மனைவி வலி தாங்க முடியாமல் அலறியதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அவரின் தலை முழுவதும் ரத்தமாக இருந்தது.

உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பெயரில் குனியமுத்தூர் போலீசார் காஜா உசேனை கைது செய்தனர்.

அடுத்த செய்தி