ஆப்நகரம்

Coimbatore: 3ஆவது நாளாகத் தொடரும் சிகிச்சை... உயிர் பிழைக்குமா பெண் யானை?

15 வயதுடைய இந்தப் பெண் யானை , நீண்ட நாட்களாக உணவருந்தாமல் மெலிந்துள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 10:57 am
உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த 15 வயது பெண் யானைக்கு தொடர்ந்து 3ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil யானைக்கு சிகிச்சை


கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்டது சிறுவாணி மலை அடிவாரம். இப்பகுதியில் உள்ள சாடிவயலை அடுத்த சர்க்கார்போர்த்தி என்னும் பழங்குடியினர் கிராமத்திற்கு அருகில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று இருந்தது கண்அறியப்பட்டு, கடந்த 8ஆம் தேதி முதல் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

15 வயதுடைய இந்தப் பெண் யானை , நீண்ட நாட்களாக உணவருந்தாமல் மெலிந்துள்ளது. அத்துடன் சோர்வாக இருக்கும் இந்த யானை, தான் படுத்து இருந்த இடத்தை சுற்றி உருள்வதால் வயிற்று வலியாலும் அவதிப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


வனச்சரகத்தின் கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையில் யானைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்கம்பக்கத்து கிராம மக்களிடமிருந்து சிகிச்சையின்போது உதவிகள் கிடைப்பதாகவும் சிகிச்சைக் குழு தெரிவிக்கிறது.



இந்நிலையில், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருக்கும் ஆர்வலர்களின் பார்வையும் இந்த யானையின் மீது விழுந்துள்ளது.

அடுத்த செய்தி