ஆப்நகரம்

கோவையில் சாலை விபத்தில் மூவர் பலி!!

அவிநாசி பைபாஸ் சாலையில் இரண்டு இடங்களில் நிகழ்ந்த வெவ்வேறு பைக் விபத்துகளில் பாண்டிச்சேரியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Jun 2019, 4:08 pm
பாண்டிச்சேரியில் உள்ள ரங்காரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் ராகவன். வயது 21. அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன். இவரது வயது 20.
Samayam Tamil Accident 3


பாண்டிச்சேரியில் உள்ள தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவர்கள் இருவரும் 2ஆம் ஆண்டு இளங்கலை அறிவியல் படித்து வருகின்றனர். அதே பகுதியைச் சேர்ந்த இவர்களுடன் படிக்கும் 12 மாணவர்கள் ஆறு பைக்குகளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த கொண்டிருந்தனர். அப்போது, இன்று காலை அவிநாசி பைபாஸ் சாலையில் திருப்பூர் பிரிவு பாலத்தில் வந்து கொண்டு இருந்தபோது ராகவன் மற்றும் வேல்முருகன் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போல அவிநாசி அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது வயது 27. திருப்பூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னே பனியன் கம்பெனி ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளானது.பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார்.

அடுத்த செய்தி