ஆப்நகரம்

இடம் பார்க்க வரச் சொல்லி, காரை திருடிய ரியல் எஸ்டேட் அதிபர்...

ரோட்டில் வைத்து கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயற்சி கேரள ரியல் எஸ்டேட் அதிபர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 17 Nov 2020, 11:37 am
கோவை மாவட்டத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி காரை திருடிச் சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil இடம் பார்க்க வரச் சொல்லி, காரை திருடிய ரியல் எஸ்டேட் அதிபர்...
இடம் பார்க்க வரச் சொல்லி, காரை திருடிய ரியல் எஸ்டேட் அதிபர்...


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ். வயது 37. இவரது நண்பர் பாலக்காட்டைச் சேர்ந்த சபரி. வயது 28. இருவரும் ரியல் எஸ்டேட் அதிபர்கள்.

சபரி கண்ணூரில் உள்ள ரெஜீசை தொடர்பு கொண்டு கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் குறைந்த விலைக்கு நிலம் விற்பனைக்கு உள்ளது எனக் கூறி, இருவரும் சேர்ந்து அந்த இடத்தை பார்ப்போம் என்று அழைத்துள்ளார்.

அதன்படி சபரி, தனது நண்பர் நிசார்(38), என்பவருடன் நேற்று முன்தினம் மாலை காரில் பெரிய நாயக்கன் பாளையத்தில் அடுத்துள்ள அங்காலம்மாள் புரம் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

2 முயல் ரூ. 500, இடம்: கோவை மத்தியச் சிறை!

அப்போது அங்கு வந்த சபரி கையில் கத்தியைக் காட்டி ரெஜிஸ் மற்றும் அவரது நண்பர் நிஷாரை மிரட்டி பணம் நகையைப் பறிக்க முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த இருவரும், தாங்கள் வந்த காரை அதே இடத்தில் விட்டுத் தப்பி ஓடினர்.

சிக்கிய வரை லாபம் எனச் சபரி அந்த காரை திருடிச் சென்று விட்டார். இதற்கிடையே இந்த திருட்டு சம்பவம் குறித்து ரெஜிசும், நிஷாரும் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து சபரியை கைது செய்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி