ஆப்நகரம்

கோவையில் மயக்கமருந்து நிபுணர்கள் கருத்தரங்கம்

நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் மயக்கமருந்து நிபுணர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மயக்கமருந்து நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கருத்தரங்கை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையின் முதன்மை மேலாளர் மருத்துவர் ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார்.

Samayam Tamil 4 May 2019, 10:55 pm
நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் மயக்கமருந்து நிபுணர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மயக்கமருந்து நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil doctor-gp-netherlands


மருத்துவத்தின் அனைத்து பிரிவுலும் தொடர்புடைய மயக்கவியல் துறை தற்போது இந்தியாவில் வேகமாக முன்னேற்றம் பெற்று வருகிறது.

இந்நிலையில் மயக்க மருந்து துறையில் உள்ள நிபுணர்களின் மேலாண்மை திறன் மற்றும் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் விதமாக கோவையில் முதன் முறையாக மயக்க மருந்து நிபுணர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கருத்தரங்கை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையின் முதன்மை மேலாளர் மருத்துவர் ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார்.

இதில் ஸ்ரீலங்கா, நேபாள் என வெளிநாட்டு மயக்க மருந்து நிபுணர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக குழந்தைகள் நலம்,தீவிர சிகிச்சை, வலி நிவாரணம், இருதய சிகிச்சை மற்றும் பிரசவம் என மருத்துவத்தின் அனைத்து துறைகளில் முக்கிய பங்காற்றும் மயக்கவியல் துறை சார்ந்த நிபுணர்களுக்கு தற்போதைய நவீன தொழில் நுட்பங்களை குறித்து கருத்தரங்கில் நிபுணர்கள் பேச உள்ளனர்.

கருத்தரங்கில் பேசிய மருத்துவமனையின் மயக்க மருந்து துறை தலைவர் மருத்துவர் ரஜனி சுந்தர், இந்தத் துறை சமீபகாலமாக இந்தியாவில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நவீன கருவிகள் மூலம் நோயாளிகளுக்குத் தரமான முறையில் மயக்கத்தைத் தர முடியும். இந்திய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மயக்கவியல் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி