ஆப்நகரம்

அடடா....! எத்தனை வருஷ மரம் தெரியுமா?

அடடா....! எத்தனை வருஷ மரம் தெரியுமா? என்று கேட்கும் அளவுக்கு கோயம்புத்தூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 20 Apr 2021, 4:33 pm
கோவை மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை 3 மணி அளவில் மின்னல், இடியுடன் கனமழை பெய்தது. மழையை காட்டிலும் மின்னல், இடி மிக கடுமையாக இருந்ததால் ஆங்காங்கே அதிகாலை மின் துண்டிப்பு ஏற்பட்டது.
Samayam Tamil மரத்தில் பற்றியுள்ள தீயை வீரர்கள் அணைக்கின்றனர்.
மின்னல் தாக்கியதில் மரம் தீப்பிடித்து எரிகிறது.


கலெக்டரை கடுப்பேத்திய கஞ்சி தொட்டி!

இந்நிலையில் கோவை ஆலந்துறை அருகே நல்லூர் வயல் பகுதியில் சிறுவாணி சாலையில் அமைந்துள்ள வாகை மரம் மின்னல் தாக்கியதில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தெரிவித்தனர்.

பிரியாணி கடை மீது பெட்ரோல் குண்டு; அதுவும் விக்கிற விலையில!

தகவலறிந்து தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தீயை அணைத்தும், காலை 11 மணி வரை மரத்தில் இருந்து புகை வருவது குறைந்தபாடில்லை. இதை அப்பகுதி வழியாக செல்வோர் நின்று பார்த்து சென்றனர்.

அடுத்த செய்தி