ஆப்நகரம்

லாட்டரி மார்ட்டின் இடங்களில் ரூ.595 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை அதிரடி

தமிழகத்தின் கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சுமார் 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இன்று முடிந்துள்ளது.

Samayam Tamil 4 May 2019, 9:40 am
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில் நடத்திய வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
Samayam Tamil 19aprersrm5rtfGD64N1H0A120THCOURTjpg


லாட்டரி கிங் மார்ட்டின் சான்டியாகோவுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வருமானவரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர்.

ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த சோதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரித்துறையினர் 595 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தின் கோவை மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் சுமார் 70 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இன்று முடிந்துள்ளது.

இச்சோதனையின்போது கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை பகுதியில் வசித்த மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் பழனியிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப்ப பின் விடுவிக்கப்பட்ட அவர் நேற்று, காரமடை வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் பழனி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அடுத்த செய்தி