ஆப்நகரம்

40 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!!

கோவையில் சுமார் 40 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது

Samayam Tamil 28 Jan 2018, 6:39 pm
Samayam Tamil jallikattu held at coimbatore after 40 years
40 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு!!
கோவை: கோவையில் சுமார் 40 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

கோவை நீலம்பூர் - மதுக்கரை பை-பாஸ் ரோட்டில், வெள்ளலுார் பிரிவு அருகே, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ‘ஓம்கார் பவுண்டேஷன்’ சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பல்லாயிரம் பேர் அங்கு குவிந்தனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க நாணயங்களும், கார், பைக் போன்ற பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

அடுத்த செய்தி