ஆப்நகரம்

கருணாநிதி மறைவால் தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பை தாங்க முடியாமல், கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 11 Aug 2018, 1:35 pm
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பை தாங்க முடியாமல், கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil கருணாநிதி மறைவால் தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்!!
கருணாநிதி மறைவால் தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்!!


திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது மறைவால் திமுக தொண்டர்கள் பலரும் அதிர்ச்சியிலும், மிகுந்த மன வருத்தத்திலும் உள்ளனர். இதனிடையே, கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர், கருணாநிதியின் மறைவைத் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகர்

தற்கொலை செய்து கொண்ட திமுக பிரமுகரின் தற்கொலை குறிப்பு


இதுகுறித்து அவர் எழுதியுள்ள தர்கொலை குறிப்பில், “எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. கலைஞர் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி