ஆப்நகரம்

கோவை சாலையோர மரத்தில் பிணமாகத் தொங்கிய ஆட்டோ டிரைவர்!

கோவை மாவட்டத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து ஆட்டோ ஓட்டுநர் சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Aug 2021, 2:21 pm
கோவை காட்டூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். வயது 47. ஆட்டோ ஓட்டுநர். கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்வதாகக் கடிதம் எழுதி வைத்து காட்டூர் பகுதியில் உள்ள சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil கோவை சாலையோர மரத்தில் பிணமாகத் தொங்கிய ஆட்டோ டிரைவர்!


இது குறித்து காட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு கடிதத்தைக் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே அவரது தற்கொலை குறித்து குடும்பத்தினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.


கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சக ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி