ஆப்நகரம்

கோவையில் களைகட்டிய காவடி போட்டிகள்!

தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் காவடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Samayam Tamil 22 Apr 2018, 6:42 pm
கோவை: தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் காவடி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil 15243860374


தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை மற்றும் சங்கமம் கலைக்குழு இணைந்து கோவையில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகளை நடத்துகிறது. கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இப்போட்டிகள் நடக்கின்றன.

கழுத்தில் வைத்து காவடி ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல், ஏணி, நாற்காலி மீதேறி ஆடுதல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் 12 குழுக்களைச் சேர்ந்த 400 பேர் கலந்துகொண்டனர். பெண்கள் உட்பட 3 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள், பதக்கங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் மாநில அளவிலான காவடி போட்டிகளை நடத்த வேண்டும் என்று போட்டியில் கலந்துகொண்டிருக்கும் கலைஞர்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.

அடுத்த செய்தி