ஆப்நகரம்

கொரோனா நிதி வழங்கிய முன்னுதாரண சிறுமிக்கு தொற்று... முறையான சிகிச்சையின்றி தவிப்பு

எனது மகள் குளிரால் அவதிப்பட்டு வரும் நிலையில் இரவு நேரத்தில் கூட போர்த்துவதற்கு பெட்சீட் எதுவும் தருவதில்லை

Samayam Tamil 12 Sep 2020, 5:36 am
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி கொரோனா தடுப்பு நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி முன்னுதாரணமாக இருந்த நிலையில் , தற்போது அந்த சிறுமி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உரிய சிகிச்சை கிடைக்காமல் இருப்பதாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil kid who gave covid fund to coimbatore collector was tested positive
கொரோனா நிதி வழங்கிய முன்னுதாரண சிறுமிக்கு தொற்று... முறையான சிகிச்சையின்றி தவிப்பு


கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது சேமிப்பில் உள்ள பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். இதைத்தொடர்ந்து இந்த சிறுமி பலருக்கும் எடுத்துக்காட்டான செயல்களில் ஈடுபட்டார்.



இந்த நிலையில் சிறுமியும் சிறுமியின் தந்தை முத்துகிருஷ்ணனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொடிசியா முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இப்படியிருக்க இவர்கள் தற்போது சிகிச்சை முகாமில் இருந்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் சிறுமியின் தந்தை முத்துகிருஷ்ணன் "யாரும் எந்த சிகிச்சையும் கொடுக்கவில்லை எனவும், மாத்திரை கேட்டால் கூட கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்". அதேபோல எனது மகள் குளிரால் அவதிப்பட்டு வரும் நிலையில் இரவு நேரத்தில் கூட போத்துவதற்கு பெட்சீட் எதுவும் தருவதில்லை என வேதனை தெரிவித்தார்.



மேலும் மாஸ்க்குகள் அங்கும் இங்கும் என கொடிசியா வளாகங்களில் கிடப்பதாகவும், இது சுகாதார சீர்கேடு ஆக உள்ளது எனவும் தெரிவித்த அவர், இந்த ஆபத்தைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி