ஆப்நகரம்

ஓட்டுப்போடாத கோவைக்காரர்களுக்கு அரசுத் திட்டம் இல்லை: வேட்பாளர் விளக்கம்!

ஓட்டுப்போடாதவர்களுக்கு அரசின் சலுகைகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கோவையில் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் விதி விதியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

Samayam Tamil 10 Apr 2021, 10:15 pm
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது. வயது 63. சுயதொழில் செய்து வருகிறார். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் வார்டு கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி என இதுவரை 36 தடவை தேர்தலில் நின்று தோல்வி அடைந்துள்ளார்.
Samayam Tamil ஓட்டுப்போடாத கோவைக்காரர்களுக்கு அரசுத் திட்டம் இல்லை: வேட்பாளர் விளக்கம்!


ஆண்டிபட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மதுரை மேற்கு, ஆர்கே நகர், திருமங்கலம் உள்ளிட்ட இடைத் தேர்தல்களில் சட்டமன்ற வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார்.

தற்போது 36 ஆவது முறையாகக் கோவை கிணத்துக்கடவு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 72. 78 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது.

இதில் பெரும்பாலான இடங்களில் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நூர் முகமது நம்மிடம் பேசுகையில், “தமிழகத்தில் வாக்களிப்பவரின் எண்ணிக்கை குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. ஓட்டுப் போடாதவர்களின் வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சலுகைகள் பறிக்கப்பட வேண்டும்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு சம்மர் டூர் ப்ளான் பண்றீங்களா... அதுக்கு முன்னாடி இதை படிங்க!

தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்” என்றார்.

இவர், 36 ஆவது முறையாகத் தேர்தலில் நின்ற போதும் வெற்றி பெற ஆர்வம் காட்டவில்லை. மக்களிடம் மாற்றம் வரவேண்டும் என எதிர்பார்ப்போடு இப்படிச் செய்கிறார். இந்த தேர்தலில் டெபாசிட் உட்பட 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும், ஒவ்வொரு தேர்தலுக்கும் தனக்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது என்கிறார்.

அடுத்த செய்தி