ஆப்நகரம்

பெரியார் தீர்மானம் நிறைவேறியது; திமுக அரசு 100வது நாளில் சாதனை!

கடந்த 1926ம் ஆண்டு பெரியார் இயற்றிய தீர்மானத்தை தமிழக அரசு பதவியேற்ற 100வது நாளில் நிறைவேற்றி சாதனை புரிந்துள்ளதாக திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

Samayam Tamil 15 Aug 2021, 1:57 pm
கோயம்புத்தூரில் ‘நாம் திராவிடர் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சி இன்று தொடங்கப்பட்டது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீ மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்சியை தொடங்கி வைத்தனர்.
Samayam Tamil கொளத்தூர் மணி பேசுகிறார்
கொளத்தூர் மணி பேசுகிறார்


இந்த புதிய கட்சியின் நிறுவனத் தலைவர் அறிவின் பன்னீர்செல்வம் ஆவார். இளைஞர்களையும், மாணவர்களையும் திரட்டி, திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் கற்பித்து, திராவிட இயக்கத் தலைவர்கள் நான் பெற்ற நன்மைகள் என்னென்ன என்பதை அவர்களின் மனதில் பதியவைத்து ,தேர்தல் அரசியலில் பங்கெடுக்க செய்து ,அரசியல் தெளிவை ஏற்படுத்துவதே நாம் திராவிட கட்சியின் முக்கிய செயல் திட்டமாகும்.

இதன் பிறகு திராவிட விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:

இந்துக்கள் என்று சொல்லப்படும் சகல சமூகத்துக்கும் கோயிலில் பூஜையில் தொழுகையில் சம உரிமை வேண்டும் என்று 1926ம் ஆண்டு பத்தாவது பார்ப்பன மாநாட்டில் பெரியார் தீர்மானம் இயற்றினார்.

அதை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த நூறாவது நாளில் நிறைவேற்றி இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைக்கிற விரோதிகளை தோலுரித்துக் காட்டுவதற்கு உருவாகியிருக்கும் இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மதுரை ஆதீனத்துக்கு திமுக ஆதரவு; அமைச்சர் அதிரடி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஆயிரம் சாதனைகளை செய்துள்ளார். ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து, பெண்களுக்கான தங்க நகை கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு மற்றும் இன்று பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களுக்கு ஆணை வழங்கியுள்ளது. இவ்வாறு கொளத்தூர் மணி பேசினார்.

அடுத்த செய்தி