ஆப்நகரம்

அண்ணன் தங்கை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: கோவை போலீசிடம் கடிதம் சிக்கியது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு அருண்குமார்(25) என்ற மகனும் பிரீத்தா(30) என்ற மகள் ஒருவரும் உள்ளனர். பிரீத்தா மனநலம் பாதிக்கப்பட்டவர். அருண்குமார் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

Samayam Tamil 8 Mar 2021, 11:00 am
இந்த சூழலிலும் அருண்குமார் மற்றும் பிரீத்தா ஆகிய இருவரும் வீட்டில் இல்லாததால் அலமேலு இருவரையும் தேடியுள்ளார். இந்த சூழலில் காணாமல் போனவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று அலமேலுவிற்கு கிடைத்துள்ளது.
Samayam Tamil அண்ணன் தங்கை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: கோவை போலீசிடம் கடிதம் சிக்கியது!


இதனைத் தொடர்ந்து அலமேலு பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரினை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் இருவரையும் அவர்களது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்டனர்.

ஏற்கனவே கடன் பிரச்சனையிலிருந்த இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருவரின் உடலை மீட்ட காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கணும் கோவை மக்களே தோனுச்சா உங்களுக்கு?

சகோதர சகோதரி இருவரும் வீட்டுத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி