கொரியா நாட்டில் ஆசியா பசுபிக் முதுகு தண்டுவட சங்க மாநாடு நடைபெற்றது. சியோலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி ஆகிய இரண்டின் அடிப்படையில் கோவை கங்கா மருத்துவமனை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான ராஜசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆசியாவிலேயே இதுபோன்று ஒரே மாநாட்டில் ஐந்து விருதுகளை பெறுவது இதுவே முதல் முறை.
புதிய மற்றும் அதிநவீன முறையில் முதுகு தண்டுவட முறிவுகளை கம்ப்யூட்டர் வழிகாட்டுதலின்படி, உள்புறமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே சரி செய்யப்படக்கூடிய சிக்கலான எலும்பு முறிவுகளை தடுக்க உதவுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கென நாட்டிலேயே முதன் முறையாக ஒரே சமயத்தில் ஐந்து விருதுகளை பெற்றதில் தாம் மிக்க பெருமை கொள்வதாக தெரிவித்தார்.
இதில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி ஆகிய இரண்டின் அடிப்படையில் கோவை கங்கா மருத்துவமனை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான ராஜசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆசியாவிலேயே இதுபோன்று ஒரே மாநாட்டில் ஐந்து விருதுகளை பெறுவது இதுவே முதல் முறை.
புதிய மற்றும் அதிநவீன முறையில் முதுகு தண்டுவட முறிவுகளை கம்ப்யூட்டர் வழிகாட்டுதலின்படி, உள்புறமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே சரி செய்யப்படக்கூடிய சிக்கலான எலும்பு முறிவுகளை தடுக்க உதவுவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கென நாட்டிலேயே முதன் முறையாக ஒரே சமயத்தில் ஐந்து விருதுகளை பெற்றதில் தாம் மிக்க பெருமை கொள்வதாக தெரிவித்தார்.