ஆப்நகரம்

எஸ்.வி.சேகர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : கோவை பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

கோவையில் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்துகாத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

Samayam Tamil 21 Apr 2018, 5:45 pm
கோவையில் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்துகாத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
Samayam Tamil 7ae41149-ae9f-4f96-9fd1-dd530ec60208


கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநா் பன்வாாிலால் புரோகித் பத்திாிகையாளா் சந்திப்பில் கலந்து கொண்டாா். சந்திப்பு முடிவுபெற்ற பின்னா் பெண் பத்திாிகையாளா் ஒருவா் ஆளுநரிடம் கேள்வி எழுப்பியிருந்தாா். அப்போது ஆளுநா் பத்திாிகையாளாின் கன்னத்தில் தட்டியவாரு பதில் தொிவித்துள்ளாா். இதனைத் தொடா்ந்து ஆளுநருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஆளுநருக்கு ஆதரவாகவும், பெண் பத்திாிகையாளா்களை கடுமையாக தரம் தாழ்த்தியும் எஸ்.வி.சேகா் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டாா். அந்த கருத்து ஊடகவியலாளா்கள் மத்தியிலும், பெண் தலைவா்கள் மத்தியிலும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் பத்திாிகையாளா்கள் மற்றும் பெண்கள் குறித்து தரகுறைவான கருத்துகளை வெளியிட்டு வரும் எஸ்.வி.சேகா், ஹெச்.ராஜாவுக்கு எதிா்ப்பு தொிவித்து பத்திாிகையாளா்கள் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் அவர்கள் நேற்றே விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கோவை செய்தியாளர்களை காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று கைது செய்யப்பட செய்தியாளர்கள் மீது போட பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் பெண் செய்தியாளரை விமர்சித்த எஸ் வி சேகர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி போரட்டம் நடத்தினர்.

அடுத்த செய்தி