ஆப்நகரம்

மாமியார் குளித்ததை மறைந்திருந்து படம் பிடித்த மாப்பிள்ளை!

மாமியார் குளிப்பதை மறைந்திருந்து குடும்பத்துடன் படம் எடுத்த ஐடி ஊழியர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 13 Oct 2021, 8:59 pm
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( 56) என்பவரின் மகளுக்கும் ஐ.டி. ஊழியரா மனோஜுக்கும் (36) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil மாமியார் குளிப்பதை படம்பிடித்த மாப்பிள்ளை
மாமியார் குளிப்பதை படம்பிடித்த மாப்பிள்ளை மீது கோவை போலீஸ் வழக்குப்பதிவு


கணவன்- மனைவி இடையே அவ்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் தனது மனைவி மீது மனோஜ் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார்.

இருவருக்கும் இடையேயான தகராறு தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில், மனோஜ் மனைவியுடன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தமது தாய், தந்தை, சகோதரி, மாப்பிள்ளை ஆகியோருடன் தங்கியிருந்துள்ளார். அப்போது த னது மனைவியை பழிவாங்குவதாக எண்ணி, மாமியார் குளிப்பதை குடும்பத்துடன் மறைந்திருந்து மனோஜ் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுத்துள்ளார்.

போலி பத்திரிகையாளர்கள்... அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்!

இந்த ஃபோட்டோக்களை இணையதளத்தில் வெளியிட போவதாக மாமனாரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். செய்வதறியாது திகைத்து வந்த பாலகிருஷ்ணன், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில், தன்னை பிளாக்மெயில் செய்துவந்த மாப்பிள்ளை மீது அவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் மனோஜ், அவரது தாய், தந்தை, சகோதரி, அவரின் கணவர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி