இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து சாகா பயிற்சியை கல்வி நிலையங்களில் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு அமைப்புகளின் ஆர்பாட்டத்தை யொட்டி ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்பு அமைத்தனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அனைத்து அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சியை ரத்து செய்ய வேண்டும் என சாலையில் அமர்ந்து போராடியதால் காவல்துறை தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணனை உட்பட 25 பேரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தூக்கி சென்றனர்.
இந்த சம்பவத்தால் விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை காவல் துறை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சார்பாக செயல்படுகிறது என பெரியாரிய அமைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.