ஆப்நகரம்

எஸ்சியாக எங்களை மாற்றுங்க, அடம் பிடிக்கும் குறும்பர் சாதி தலைமை!

சாதி ரீதியான அரசியல் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ள சூழலில், பழங்குடி மக்கள் இனப் பிரிவில் தங்கள் சமுதாயத்தைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தும் குறும்பர் இன மக்கள்...

Samayam Tamil 20 Dec 2020, 4:16 pm
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலிருந்து குறும்பர் இன மக்களைப் பழங்குடி மக்கள் இன பிரிவில் சேர்க்கும் அரசாணையை மத்திய மாநில அரசுகள் விரைவில் வெளியிட வேண்டும் எனத் தமிழ்நாடு குறும்பர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil எஸ்சியாக எங்களை மாற்றுங்க, அடம் பிடிக்கும் குறும்பர் சாதி தலைமை!
எஸ்சியாக எங்களை மாற்றுங்க, அடம் பிடிக்கும் குறும்பர் சாதி தலைமை!


கோவை கணேசபுரம் பகுதியில் தமிழ்நாடு குறும்பர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கணேசபுரம் முரண்டம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. சுரேஷ் பாபு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட இளைஞரணி மற்றும் மகளிர் அணிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு குறும்பர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குறும்பர் இன மக்கள், சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
குறும்பர் இன மக்கள் அனைவரும், சமூக கௌரவம் மற்றும் அரசியல் அங்கீகாரம் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்து வருகிறோம்.

2010 ஈமு கோழி வழக்கு தீர்ப்பு: 10 ஆண்டு சிறை, 2 கோடி ஃபைன்!

குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலிருந்து குறும்பர் இன மக்களைப் பழங்குடி மக்கள் இன பிரிவில் சேர்க்கும் அரசாணையை வெளியிட, தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை உடனடியாக அமல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும், மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டும். மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி